இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம்.! இந்தியர்கள் கவனத்திற்கு !
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது, சூரியனை சந்திரன் மறைப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வையே சூரிய கிரகணம் என்கிறார்கள். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8ம் தேதி அன்று ஏற்பட உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அதிக அளவில் ஏற்படக்கூடும், அதாவது, ஏப்ரல் 8ம் தேதி ஏற்படகூடிய. இந்த சூரிய கிரகணம் 4 மணி நேரம், 25 நிமிடங்கள் வரை நீடிக்கும். இதற்கு முன் ஏற்பட்ட சூரிய கிரகணங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக ஏற்பட்டதே சாதனையாக இருக்கிறது.
ஆனால் இந்த ஆண்டு ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் பெரிய விளைவுகவை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சூரிய கிரகணம் : இந்திய நேரப்படி சூரிய கிரகண நிகழ்வானது, ஏப்ரல் 8ம் தேதி, இரவு 10:08 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி, நள்ளிரவு 2:22 மணிக்கு நிறைவடைய உள்ளது. சூரிய கிரகணத்தின் உச்சம் ஏப்ரல் 8ம் தேதி இரவு 11:47 மணிக்கு வெளிப்படும். இந்த சூரிய கிரகணம் நிகழ்வானது, இந்திய நேரப்படி இரவு நேரத்தில் நிகழ்வதால், நம்மால் பார்க்க முடியாது. ஆனால் இந்த சூரிய கிரகணத்தை மெக்சிகோவில் சினாலோவா முதல் கோஹுயிலா வரையிலும், அமெரிக்காவின் டெக்ஸாஸ் முதல் மைனே வரையிலும், கனடாவின் ஒண்டாரியோ முதல் நியுபவுண்ட்லாண்ட் வரையிலும் வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் காண முடியுமாம்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.