ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி மாத தேர் திருவிழா தொடக்கம் !

0

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார வீதியில் மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று கோவிலில் உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் பசுவின் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.

logo right

முன்னதாக காலையில் சுவாமிக்கு சிறப்பு விசேஷ பூஜை செய்யப்பட்டு வேத பட்டாசியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவிலில் உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடிக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் செய்து மஹா தீபாரதனை காண்பித்தனர்.

தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 8 நாட்கள் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.