திண்டுக்கல் : வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்…

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயிலில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

logo right

கடந்த 1ம் தேதி முதல் இ-பைலிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இந்த இ-பைலிங் முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இருந்த போதிலும் கடந்த 1ம் தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை கண்டித்து இன்று நடைபெற்ற போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி, இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுப்பினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.